துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று மாதங்களுக்குள் 8 பேர் பலி!
இவ்வருடத்தின் இதுவரையிலான மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற பாதாள உலக குழுக்களுக்கிடையிலான மோதலினால், 8 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அதுருகிரிய மற்றும் ஆமர் வீதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
அதேபோல், கிரேன்பாஸ்,பத்தரமுல்ல,தலங்காமம்,வத்தளை,பொரளை,கம்பஹா மற்றும் மிஜிராவில பகுதிகளிலும் இடம்பெற்ற துப்பாகிப் பிரயோகங்களிலும் ஏனையவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாகந்துரை மதுசான் மற்றும் சமயன் என்கிற இரண்டு நபர்களுக்கு கீழ் இயங்கி வரும் இரு பாதாள கும்பலுக்கிடையிலான மோதல் காரணமாகவே இவ்வாறு நபர்கள் கொல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை