போக்குவரத்துக்குப் பாதையில்லை- வீட்டுத் திட்டக் குடும்பங்கள் சிரமம்
வவுனியா மாவட்டத்தின் கொல்லர்புளியங்குளம், குஞ்சுக்குளம் பகுதிகளில் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்துக்கு போக்குவரத்துச் செய்வதற்கு எந்தவொரு பாதையும் இன்றித் தவிக்கும் 40 குடும்பங்கள் தொடர்பில் உரியவர்கள் ஆவன செய்ய வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் ஏ-–9 வீதியின் மேற்குத்திசையில் தொடருந்து பாதையினையும் தாண்டிய பகுதியில் உள்ள குறித்த கிராமங்களில் பிரதேச செயலகத்தின் ஊடாக சுமார் 100 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன. காணிகள் வழங்கப்பட்ட குடும்பங்களில் அதிக குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டு அப்பகுதியில் தற்போது மக்கள் குடியிருப்பதோடு எஞ்சிய நிலங்களில் வீடுகளை அமைக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றன.
இருப்பினும் இவ்வாறு வழங்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கான மாதிரி வரைபடம் உரிய தரப்புக்களால் புகையிரத திணைக்களத்திடம் கையளிக்கத் தவறியதன் காரணமாக தொடருந்துப் பாதைகள் அமைக்கும் சமயம் எந்தவொரு இடத்திலும் வீதிக்கடவை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இப் பகுதியில் வசிக்கும் மக்கள் பல மைல்கள் சுற்றுப் பயணத்தின் மூலமும் கிராமத்தைச் சென்றடைய முடியவில்லை.
தொடருந்துப் பாதையினை கால் நடையாக கடந்து அதன்பின்னர் வீதியற்ற பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான வயல் நிலங்களின் ஊடாக பயணிக்கும் நிலமையே தற்போதுவரை உள்ளது. கோடைகாலத்தில் கால்நடையாகவேனும் பயணிக்கும் நிலையில் மழை காலத்தில் இது ஓர் அபாயகரமான போக்குவரத்தாகவே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டு கின்றனர்.
இப் பகுதியில் காணப்படும் நிலங்களில் தற்போது அமைக்கப்படும் வீடுக ளுக்காக புகையிரதப் பாதை வரை உழவு இயந்திரங்களில் கொண்டுவந்து கொட்டப்படும் கல், மண் என்பவை கடகங்களில் சுமார் 400 மீற்றர்வரையில் காவிச் சென்றே குடியி ருப்புக்களை அமைக்கும் துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. எனவே அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் ஏற்பட்ட இந்த அவலத்தை உடன் நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு வீதிக் கடவை அமைக்காது பாதை அமைந்தமை தொடர்பில் புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
‘இந்தப்பகுதியில் புகையிரதப் பாதை அமைக்கும் சமயம் எந்த இடங்களில் வீதிக் கடவை அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டுமாறு பிரதேச சபையினை எழுத்தில் கோரியிருந்தோம். இருப்பினும் பிரதேச சபையால் அவ்வாறு இப் பிரதேசத்தில் குடியிருப்பு வீதி அமைவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட வில்லை’ என்று தெரிவித்தனர்.
‘குறித்த விடயம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு நேரில் பார்வையிடப்பட்டுள்ளது. பிரதேச செயலரின் சிபார்சுடன் உடனடியாக அமைக்கவேண்டிய பாதைகள் தொடர்பில் புகையிரத திணைக்களத்துடன் தொடர்புகொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என பிரதேச சபையின் செயலர் தெரிவித்தார்.
வீட்டுத்திட்டத்துக்கு போக்குவரத்துச் செய்வதற்கு எந்தவொரு பாதையும் இன்றித் தவிக்கும் 40 குடும்பங்கள் தொடர்பில் உரியவர்கள் ஆவன செய்ய வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் ஏ-–9 வீதியின் மேற்குத்திசையில் தொடருந்து பாதையினையும் தாண்டிய பகுதியில் உள்ள குறித்த கிராமங்களில் பிரதேச செயலகத்தின் ஊடாக சுமார் 100 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன. காணிகள் வழங்கப்பட்ட குடும்பங்களில் அதிக குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டு அப்பகுதியில் தற்போது மக்கள் குடியிருப்பதோடு எஞ்சிய நிலங்களில் வீடுகளை அமைக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றன.
இருப்பினும் இவ்வாறு வழங்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கான மாதிரி வரைபடம் உரிய தரப்புக்களால் புகையிரத திணைக்களத்திடம் கையளிக்கத் தவறியதன் காரணமாக தொடருந்துப் பாதைகள் அமைக்கும் சமயம் எந்தவொரு இடத்திலும் வீதிக்கடவை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இப் பகுதியில் வசிக்கும் மக்கள் பல மைல்கள் சுற்றுப் பயணத்தின் மூலமும் கிராமத்தைச் சென்றடைய முடியவில்லை.
தொடருந்துப் பாதையினை கால் நடையாக கடந்து அதன்பின்னர் வீதியற்ற பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான வயல் நிலங்களின் ஊடாக பயணிக்கும் நிலமையே தற்போதுவரை உள்ளது. கோடைகாலத்தில் கால்நடையாகவேனும் பயணிக்கும் நிலையில் மழை காலத்தில் இது ஓர் அபாயகரமான போக்குவரத்தாகவே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டு கின்றனர்.
இப் பகுதியில் காணப்படும் நிலங்களில் தற்போது அமைக்கப்படும் வீடுக ளுக்காக புகையிரதப் பாதை வரை உழவு இயந்திரங்களில் கொண்டுவந்து கொட்டப்படும் கல், மண் என்பவை கடகங்களில் சுமார் 400 மீற்றர்வரையில் காவிச் சென்றே குடியி ருப்புக்களை அமைக்கும் துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. எனவே அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் ஏற்பட்ட இந்த அவலத்தை உடன் நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு வீதிக் கடவை அமைக்காது பாதை அமைந்தமை தொடர்பில் புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
‘இந்தப்பகுதியில் புகையிரதப் பாதை அமைக்கும் சமயம் எந்த இடங்களில் வீதிக் கடவை அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டுமாறு பிரதேச சபையினை எழுத்தில் கோரியிருந்தோம். இருப்பினும் பிரதேச சபையால் அவ்வாறு இப் பிரதேசத்தில் குடியிருப்பு வீதி அமைவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட வில்லை’ என்று தெரிவித்தனர்.
‘குறித்த விடயம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு நேரில் பார்வையிடப்பட்டுள்ளது. பிரதேச செயலரின் சிபார்சுடன் உடனடியாக அமைக்கவேண்டிய பாதைகள் தொடர்பில் புகையிரத திணைக்களத்துடன் தொடர்புகொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என பிரதேச சபையின் செயலர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை