லசந்த படுகொலை விசா­ரணை தொடர்கிறது!

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு, பாரா­ளு­மன்றில் லசந்­தவின் கொலை தொடர்பில் பேசப்­பட்ட சில ஹன்சார்ட் அறிக்­கை­களை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக  கோரி­யுள்­ளது. 
இது தொடர்பில் கல்­கிஸை நீதிவான் மொஹம்மட் மிஹா­லிடம் இடை­யீட்டு மனு­வூ­டாக குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு இக்­கோ­ரிக்­கை­யை முன்­வைத்­துள்­ளது. அத்­துடன் லசந்த விக்­ர­ம­துங்க பயன்­ப­டுத்­திய வங்­கிக்­க­ணக்­குகள் தொடர்­பி­லான  விப­ரங்­களை அந்தந்த வங்­கிகளூடா­கவும் அவர் தொடர்­பு­களை முன்­னெ­டுத்த தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில்  குறித்த தொலை­பேசிச் சேவை வழங்­குநர் நிறு­வனங்கள் ஊடா­கவும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு அறிக்கை கோரி­யுள்­ளது.
குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­டுள்ள கல்­கிைஸ நீதிவான் நீதி­மன்றம்,  ஹன்சார்ட் அறிக்கை, தொலை­பேசி தொடர்­பி­லான விப­ர­மான அறிக்கை மற்றும் வங்­கிக்­க­ணக்­குகள் குறித்த அறிக்­கை­களை குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கு  கைய­ளிக்க, பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரிகள், முகா­மை­யா­ளர்­களு க்கு தனித்­த­னி­யாக உத்­த­ரவு பிறப்­பித்­துள் ­ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி கல்­கிஸை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அத்­தி­டியவில் தனது காரில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை செய்­யப்­பட்டார்.  இது தொடர்பில்  கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின் சிறப்பு விசா­ர­ணை­களை  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் திஸே­ராவின் கீழ் பொலிஸ் பரி­சோ­த­கர்­க­ளான நிசாந்த சில்வா மற்றும் சுதத் குமார ஆகியோர் அடங்­கிய சிறப்புக் குழு முன்­னெ­டுத்­துள்­ளது. இதன்­போது லசந்த சுட்டுக் கொல்­லப்­ப­ட­வில்லை என்­ப­தையும் அவர் கூரிய ஆயுதமொன்­றினால் தலையில் பல­மாக தாக­்கப்­பட்டே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணைகள் ஊடாக நிரூ­பித்­துள்­ளது.
அதன்­படி சம்­பவம் தொடர்பில் முன்னாள் இரா­ணுவ புல­னாய்வு சார்ஜன்ட் மேஜர் தர அதி­கா­ரி­யான பிரே­மா­னத்த உட­லா­கம என்­ப­வ­ரையும் பொலிஸார் கைது செய்த நிலையில் பின்னர் அவ­ருக்கு பிணை வழங்­கப்பட்­டது. லசந்த கொலையின் சாட்­சி­யாளர் ஒரு­வரை கடத்­தி­யமை தொடர்பில் அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.
அண்­மையில் லசந்த கொலை தொடர்பில் சாட்­சி­யங்­களை மாற்­றி­யமை, அழித்தமை தொடர்பில் முன்னாள் கல்கிஸை குற்ற வியல் பிரிவு பொறுப்பதிகாரி சுகந்தபால வும் மேல் மாகாணத்தின் தென்பகுதிக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக் காரவும் கைது செய்யப்பட்டு தற்போதும் விளக்கமறியலில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.