மாணவனின் நேர்மையை பாராட்டி சைக்கிள் அன்பளிப்பு!

அம்பாறை மவாட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளை வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று வீதி கடமையில் இருந்த பொலிசாரிடம் ஒப்படைத்த மாணவனின் நற்செயலைப் பாராட்டி பாடாலைக்குச் செல்வதற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றினை பணத்தின் உரிமையாளர் அன்பளிப்பு செய்துள்ளார்.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் தரம் 08  பிரிவில் கல்வி கற்கும் தம்பிலுவில் கிராமத்தினைச் சேர்ந்த க.ஹயானன் என்ற மாணவனே இவ்வாறு வீதியில் கண்டெடுத்த பணத்தை எடுத்தக் கொண்டு பொலிசாரை தேடிச் சென்ற போது வீதியில் கடமையில் இருந்த பொலிசாரைக் சந்தித்து அவர்களிடம் பணத்தையும் வங்கிப் புத்தகம் மற்றும் அடையாள அட்டையும் கடந்த வியாழக்கிழமை (15) ஒப்படைத்திருந்தார்.
இதனையடுத்து குறித்த பணமும் ஆவணமும் உரிமையாளர்களிடம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டதுடன் குறித்த மாணவனை பொலிசார் பாராட்டியதோடு இம்மாணவனை முன்மாதிரியாக் கொண்டு ஏனைய மாணவர்கள் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து குறிந்த மாணவனின் நற்செயலை பாராட்டு வகையின் நேற்று வியாழக்கிழமை (22) ஆம் திகதி பணத்தின் உரிமையாளரான நவரட்ணம் சுந்தரேஸ்வன் (வாவு) சுமார் 15,500 ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றை அன்பளிப்பு செய்ததோடு இதனை   பாடசாலையின் காலை ஒன்றுகூடல் வேளையில் மாணவனை பாராட்டி திருக்கோவில் வலயக்கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் வி. குணாலன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். தர்மபாலன், பாடசாலை அதிபர் வி. ஜயந்தன், மாணவனின் வகுப்பாசிரியர் ஆகியோர் மாணவனை பாராட்டி துவிச்சக்கரவண்டியை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.