வவுனியாவில் முதிரை பலகை கடத்தல்!

வவுனியா மடுக்குளத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட முதிரை
பலகைகள், முதிரைமரக் குற்றி (தீராந்தி) மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
வவுனியா ஈச்சங்குளத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்ட பொலிஸார் முதிரை மர பலகைகள் ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றினை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். எனினும், சைகையினை மீறி அவ்வாகனம் மிக வேகமாக சென்றுள்ளது.
இவ்வாறு சென்ற வாகனத்தினை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய குழுவினர் துரத்தி பிடித்துள்ளனர்.
இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சுமார் இரண்டரை இலட்சம் பெறுமதியான முதிரை மர பலகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் பண்டாரிக்குளத்தை சேர்ந்த 22 வயதுடைய வாகன சாரதியை கைது செய்து, இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.