நுவரெலியா குடிநீரில் மலம் கலப்பு மக்கள் பீதி!

நுவரெலியா நகரிற்குட்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீரில் மலம் கலக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

நுவரெலியா நகருக்குடட்பட்ட பகுதிகளுக்கு பீதுருதாளகால சரணாலயத்தில் உள்ள 8 நீர்ஏந்திகளிலிருந்து நீர் வழங்கப்படுகின்றது.

அவை நீர்தாங்கிகளில் நிறப்பப்பட்டு க்லோரின் கலந்து மக்கள் பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் கடந்த காலங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற இந்த நீரில் மலம் கலக்கபட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

நீர்ஏந்து பகுதிகளில் இந்த மலம் நீருடன் கலந்திருக்கலாம் என சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.