1 பில்லியன் ரூபாய் செலவில் நாடாளுமன்றம் புனரமைப்பு!
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியானது 35 வருடங்களக்குப் பின்னர் 1 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு செலவாகும் பணத்தை கோரும் குறிப்பாணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுசெயலாளர் நாயகம் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கூரை, வாயிற் கதவுகள், மலசல கூடம்,நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை