நாடாளாவிய ரீதியாக 2 ஆயிரத்து 625 தானசாலைகள் பதிவு !

விசாக பண்டிகையை முன்னிட்டு நாடாளாவிய ரீதியாக 2 ஆயிரத்து 625 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தானசாலைகள் நடத்தப்படும், பகுதிகளில் இன்றும், நாளையும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  பொது சுகாதார மருத்துவர் சங்கத்தின் செயலாளர் பி.எம்.எம் பால சூரிய   தெரிவித்தார்.

 இதேவேளை, தானசாலைகள் பதிவு செய்யப்படுவது அத்தியாவசியமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.