தியாக தீபம் திலிபனின் நினைவுத்தூபி மீள்கட்டுமானம்!

தியாக தீபம் திலிபனின் நினைவிட மீள்கட்டுமானப்பணிக்கான ஆயத்த வேலைகள் நேற்று (04)  ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோலட்ட தலைமையில் நேற்று பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகின.
தமிழீழவிடுதலைப்புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக, தமிழர்களின் கௌரவமான அரசியல்  விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்ஷை வழியில் உண்ணாநோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கிய திலீபனின்  நினைவிடம்  மீளவும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமானம் மேற்கொள்ளப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.