யாழில் கலாசார சீர்கேடுகள் அதிகரிப்பு!

யாழ்ப்­பா­ண மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட யாழ்ப்­பா­ண மையப் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் கலா­சா­ரச் சீர்­கே­டான பல
விடயங்­கள் இடம்­பெ­று­கின்றன. எனவே இந்­தச் செயற்­பா­டு­களை உரிய தரப்­பி­னர் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று நக­ருக்கு வந்து செல்­லும் பல­ரும் தெரி­வித்­துள்­ளனர்.
இது தொடர்­பில் அவர்­கள் தெரி­வித்­த­தா­வது:
யாழ்ப்­பா­ணம் மத்­திய பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கா­மை­யில் அமைக்­கப்­பட்­டு­வ­ரும் மருத்­து­வ­பீட விசேட சிகிச்சைப் பிரி­வுக்கு சொந்­த­மான கட்­ட­டத்­துக்கு முன்­பாக உள்ள கடைத்­தொ­கு­திக்குப் பின்­பா­கவே இவ்­வா­றான சீர்­கே­டு­கள் அரங்­கே­று­கின்­றன.
அந்­தப் பிர­தே­சத்­தில் மது அருந்­து­தல், புகைத்­தல், போதைப் பொருள்­க­ளின் பாவனை போன்ற சீர்­கே­டான விட­யங்­கள் பல­வும் இடம்­பெ­று­கின்­றன. அத்­து­டன் மது­பா­னப் போத்­தல்­க­ளும், சிக­ரட் பகு­தி­க­ளும், பாக்கு துப்­பல்­க­ளு­மாக அந்த இடம் அசிங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
அங்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர்கள் கட­மை­யி­லி­ருந்­தும் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­றன. இரவு நேரங்­க­ளிலே அங்கு இவ்­வா­றான சம்­ப­வங்­கள் இடம்­பெ­று­கி­றது. எனவே இந்­தச் செயற்­பா­டு­கள் தடுத்து நிறுத்­தப்பட்டு நகர் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டும். இந்­தச் செயற்­பா­டு­கள் மேலும் அங்கு இடம்­பெ­று­மா­னால் பல விளை­வு­கள் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் அதி­கம் உண்டு. அதி­கா­ரி­கள் இதில் கூடிய கவ­னம் செலுத்த வேண்­டும்– என்­ற­னர்.
“ இவை அனைத்­தும் சட்­ட­ வி­ரோ­த­மா­கவே இடம்­பெ­று­கின்­றன. மாந­கர சபைக்­குட்­பட்ட பிர­தே­ச­மாக இருப்­பி­னும் நாம் இந்த இடங்­க­ளுக்கு அனு­மதி வழங்­க­வில்லை. இது தொடா்­பாக எமக்­கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­க­வுள்­ளோம். முன்­பு­ற­மாக உள்ள கடை­கள் அகற்ற நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­ப­டு­கின்­றன. அத்­து­டன் முன்­பு­ற­மாக தரிக்­கப்­ப­டும் பேருந்­து­க­ளும் இனி அவ்­வி­டத்­தில் நிறுத்­தா­மல் செய்­யப்­ப­ட­வுள்­ளது” என்று யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆணை­யா­ளர் தெரி­வித்­தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.