பறவை மோதியதில் தரையிறக்கப்பட்ட விமானம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தள ஊடாக துபாய் நோக்கி புறப்பட்டு செல்ல வந்த துபாய் விமானம் ஒன்றின் இடது பக்க இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியதால், அந்த விமானம் இன்று காலை 7.11 மணி முதல் மத்தள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

FZ 551 ரக விமானமான பிளய் டுபாய் விமானத்தின் இடது பக்கம் இயந்திரத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. 

கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து 113 பயணிகளுடன் மத்தளைக்கு சென்ற விமானம் அங்கிருந்த 55 பயணிகளை ஏற்றிச் செல்ல விமானத்தை தரையிறக்கிய போதே பறவை ஒன்று இயந்திரத்தில் மோதியுள்ளது. 

டுபாய் செல்வதற்கு கட்டுநாயக்கவில் இருந்து விமானத்தில் ஏறிய 113 பயணிகளும், மத்தளை விமானநிலையத்தில் இருந்த 55 பயணிகளும் தொடர்ந்து மத்தளை விமானநிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை விமானத்தின் இயந்திரத்தில் பறவைகள் மோதினால், விமான பொறியியலாளரால் பரிசோதனைக்கு உட்படுத்தாது விமானம் புறப்படாது எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பொறியியலாளரை துரிதமாக அழைத்து வரவுள்ளதாகவும் மத்தள விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.