அத்துரலிய ரத்ன தேரர் நடுநிலையாக இருக்க முடிவு!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார். 

இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

முன்னதாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதமரை எதிர்த்து வாக்களிப்பதாக அவர் கூறியிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.