அனைத்து மாகாண ஆளுநர் பதவிகளிலும் மாற்றம்!

அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு முன்னர் அனைத்து மாகாண ஆளுநர்களையும் அழைத்து ஜனாதிபதி பேசியுள்ளதாகவும், அதன்படி விரைவில் இந்த மாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது. 

ஒரு ஆளுநரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டிருப்பததே இந்த மாற்றத்திற்கான காரணமாக அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.