மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற நடவடிக்கை!

மிரிஸ்ஸ கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத நிர்மாணங்களையும், மே மாதம் முதலாம் திகதி முதல் அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் ப்ரபாத் சந்தரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

 மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.