சண்முகா இந்துக்கல்லூரி ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல!

திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் ஆசிரியர்கள் அணியும் ஆடை தொடர்பாக பாடசாலை அதிபருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் கணவன்மாருக்கும் இடையில் எழுந்த முரண்பாட்டை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் சார்பாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி அருசா ஜெயராசா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து ஆசிரியைகளுக்கும், அவர்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்க, கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமையைத் தொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாவட்ட வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில், பழைய மாணவர் சங்க பிரதிநிதி அருசா ஜெயராசா மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.