சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் கைது!

நவத்தேகம-வெலிஅகார பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் அடங்களாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை பிரதேச சபைக்காக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ​போட்டியிட்டு சபைக்கு தெரிவான உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சிலர் குறித்த இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 106,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.