யாழ் இந்திய புதிய துணைத்தூதுவர் - வடமாகாண ஆளுநர் சந்திப்பு!

யாழ் இந்திய புதிய துணைத்தூதுவராக பதியேற்றுள்ள எஸ்.பாலசந்திரன் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை நேற்று முன்தினம் சந்தித்துள்ளார்.
ஆ.நடராஜன் புதுடில்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் புதிய யாழ் இந்திய துணைத்தூதுவராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.