சவூதி அரேபிய மக்களுக்கு மீண்டும் திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம்!

சவூதி அரேபிய மக்களுக்கு மீண்டும் திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
35 வருடங்களின் பின்னர் நாளை ரியாத் நகரில் சினிமா மண்டபம் ஒன்று திறக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 15 நகரங்களில் 40 சினிமா திரையரங்குகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதத் தலைவர்களின் ஆலோசனைபடி சவூதி அரேபியாவில் 1980ஆம் ஆண்டு திரைப்படம் தடை செய்யப்பட்டது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மேற்கொண்டுவரும் திருத்தங்களின் ஒரு நடவடிக்கையாக மீண்டும் அந்நாட்டில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.