எதிராக இருந்த ஐதேக உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் தான் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் 28 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக பாலித ரங்கே பண்டார கூறினார். 

இன்று மாலை கொழும்பில் நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

முன்னதாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதமரை எதிர்த்து வாக்களிப்பதாக அவர் கூறியிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.