சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரட் தொகையிடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர். 

இவரிடமிருந்து 33,000 சிகரட்டுக்களை சுங்க பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஊருமீய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.