இலகு தொடரூந்து முறைமையினை கொழும்பில் அறிமுகப்படுத்த திட்டம்!

இலகு தொடரூந்து முறைமையினை இலங்கை தலைநகர் கொழும்பில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 குறித்த திட்டத்திற்கு அமைய 2025 ஆம் ஆண்டளவில் இந்த தொடரூந்து சேவை ஆரம்பிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 இதன்மூலம் சிறந்த போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைய 7 இலகுரக தொடரூந்து பாதைகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 முதலாவது திட்டம் முன்னுரிமை அடிப்படையில் கொழும்பில் இருந்து பொரளை, பத்தரமுல்ல, ஊடாக மாலபேக்கு அமைக்கப்படவுள்ளது.

 இதற்குரிய அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதுடன், 2 ஜப்பானிய நிறுவனங்கள் இந்த பணியை மேற்கொள்ளவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.