வாஸின் மரண தண்­ட­னைக்கு எதி­ராக மேன்முறை!

வர்த்­தகர்  மொஹமட்  சியாம்  படு கொலை விவ­கா­ரத்தில்  மரண  தண்­டனை விதிக்­கப்­பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குண­வர்­தன உள்­ளி ட்ட குற்­ற­வா­ளி­களின் மேன்முறை­யீ­டு­களை எதிர்­வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல்  தொடர்ச்­சி­யாக விசா­ரணை செய்ய உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.   


தனக்கு எதி­ராக ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஊடாக வழங்­கப்­பட்ட மரண தண்­ட­னையை நீக்­கு­மாறு கோரி வாஸ், அவ­ரது மகன் ரவிந்து வாஸ்  உள்­ளிட்ட ஐந்து குற்­ற­வா­ளி­களும்  தாக்கல்  செய்த மேன்முறை­யீடு நேற்று  விசா­ர­ணைக்கு வந்த போதே உயர் நீதி­மன்றம் இந்த திகதி குறிப்பிட்­டது. 
அதன்­படி செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் இவ்­வ­ழக்கு தொடர்ச்சியாக விசா ரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.