வாஸின் மரண தண்டனைக்கு எதிராக மேன்முறை!
வர்த்தகர் மொஹமட் சியாம் படு கொலை விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளி ட்ட குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனக்கு எதிராக ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஊடாக வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறு கோரி வாஸ், அவரது மகன் ரவிந்து வாஸ் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு வந்த போதே உயர் நீதிமன்றம் இந்த திகதி குறிப்பிட்டது.
அதன்படி செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் இவ்வழக்கு தொடர்ச்சியாக விசா ரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை