தாயும், மகளும் வெட்டிப் படுகொலை!


மஹியங்கனை   மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்கள், இகிரியகொட   மாபாகடவெவ பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான பெண்ணும், அவரது 40 வயதான மகளும் என தெரியவந்துள்ளது.

 குறித்த பெண்ணின் புதல்வர் கொலை தொடர்பில் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 இந்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மஹியங்கனை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.