தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை!

தெற்காசிய கனிஷ்ட மற்றும் பயிலுனர் மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்த போட்டி மாலைதீவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்;; ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட போட்டிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை சார்பில் 12 வயதிற்கு உட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் போட்;;;டியாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்தப் போட்டி ஓகஸ்ட் மாதம் மியன்மாரில் நடைபெறும் ஆசிய சம்பியன் போட்டிக்கான தகுதிகாண் போட்டியாக கருதப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.