IPL போட்டியின் பிரம்மாண்ட அறிமுக விழாவில் நடனமாடும் தமன்னா!

இவ்வாண்டு நடைபெறவுள்ள IPL போட்டியின் பிரம்மாண்ட அறிமுக விழாவில் நடிகை தமன்னா நடனமாடவுள்ளார். 11 ஆவது IPL போட்டி ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இன்னும் மூன்று
நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், IPL பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் வௌியாகிக்கொண்டிருக்கின்றன. இம்முறை IPL இல் இரண்டு வருடத் தடை நீங்கி களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக IPL 2018 அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நடனமாடத் தயாராகி வருகின்றனர். ஹிருத்திக் ரோஷன், ரிஷி தவான் ஆகியோரும் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ப்ரினீதி சோப்ரா ஆகியோரும் கலந்துகொண்டு நடனம் ஆடுகிறார்கள். இவர்களோடு தற்போது தமன்னாவும் இணைந்து நடனமாடவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுவதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.