எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.