180 இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களை கொள்ளையிட்டவர்கள் கைது!

180 இலட்சம் பெறுமதியான மாணிக்க கற்களை கொள்ளையிட்ட  மூவர் பேருவளை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
 குறித்த நபர்கள் பேருவளை – சபுகொட – விகாரை வீதியில் மோட்டார் சைக்களில் பயணித்த நபரை தடுத்து நிறுத்தி, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி குறித்த மாணிக்க கற்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த  நபர்கள் 24, 31 மற்றும் 35 வயதான எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விவாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.