‘மே 18’- தமிழ்த் தேசிய துக்க தினம்!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18ஆம் திகதியை, தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்த் தேசிய துக்க நாளாகவும் அறிவித்து வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 122ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்றது.
மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக அறிவிக்கவேண்டும் என்று வடக்கு மாகாண சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சபையில் முன்மொழிந்தார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இன அழிப்பு நடத்தப்பட்டது. அதனால் மே 18 ஆம் திகதியில் வருடாந்தம் நினைவேந்தல் இடம்பெறுகிறது.
அந்த நாளை இனஅழிப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் வழிமொழிந்தார்.
இதனை அடுத்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.
கருத்துகள் இல்லை