சீரற்ற காலநிலை உயிரிழப்பு – 20ஆக உயர்வு!
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்
என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். என்று அந்த நிலையம் நேற்று மதியம் தகவல் வெளியிட்டது.
தற்போதுள்ள மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 40ஆயிரத்து17 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 700 க்கும் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 14 ஆயிரத்து 437 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 553 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 105 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. 4 ஆயிரத்து 708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று அந்த நிலையம் மேலும் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை