தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிக்கு வடக்கு –கிழக்கு மாணவர்கள் 23பேர் தெரிவு!
மூவின மாணவர்களும் பங்கு பற்றிய தேசிய கணித ஒலிம்பியாட் போட்டிக்கு 45
மாணவர்கள் தெரிவாகியிருக்கின்ற நிலையில் வடக்கு –கிழக்கு மாணவர்கள் 23பேர் தெரிவாகியிருப்பது ஒரு நல்ல செய்தியாகும். வடக்கில் 11பேரும், கிழக்கில் 12பேரும் தெரிவாகியிருக்கின்றனர்.
இந்த 23பேரில் 21பேர் தமிழ் மாணவர்களாவர். இரண்டு பேர் முஸ்லிம் மாணவர்களாவர். அல்லாமலும் தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த மூன்று மாணவர்களில் ஒருவர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இந்திரன் றதுஷா. அவர் 56 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் முத்திரை பதித்த மாணவியாக மிளிர்கின்றார்.
மேலும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரியில் மட்டும் 6மாணவர்கள் தெரிவாகியிருப்பது நல்ல தகவலே. பருத்தித்துறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், அளவெட்டி, மட்டக்களப்பு, கிண்ணியா, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் தோற்றியிருப்பதும் வென்றிருப்பதும் ஓர் இமாலய சாதனையே.
தொடர்ந்து இவர்களனைவரும், பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளுகின்ற வாய்ப்பினைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பி டத்தக்கதாகும்.
மாணவர்கள் தெரிவாகியிருக்கின்ற நிலையில் வடக்கு –கிழக்கு மாணவர்கள் 23பேர் தெரிவாகியிருப்பது ஒரு நல்ல செய்தியாகும். வடக்கில் 11பேரும், கிழக்கில் 12பேரும் தெரிவாகியிருக்கின்றனர்.
இந்த 23பேரில் 21பேர் தமிழ் மாணவர்களாவர். இரண்டு பேர் முஸ்லிம் மாணவர்களாவர். அல்லாமலும் தேசிய மட்டத்தில் சாதனை புரிந்த மூன்று மாணவர்களில் ஒருவர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இந்திரன் றதுஷா. அவர் 56 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் முத்திரை பதித்த மாணவியாக மிளிர்கின்றார்.
மேலும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரியில் மட்டும் 6மாணவர்கள் தெரிவாகியிருப்பது நல்ல தகவலே. பருத்தித்துறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், அளவெட்டி, மட்டக்களப்பு, கிண்ணியா, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் தோற்றியிருப்பதும் வென்றிருப்பதும் ஓர் இமாலய சாதனையே.
தொடர்ந்து இவர்களனைவரும், பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளுகின்ற வாய்ப்பினைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பி டத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை