4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது!

தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக எடுத்துவந்த இருவரை இன்று (21) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

சிங்கப்பூரில் இருந்து இன்று (21) காலை வருகை தந்த மாத்தறை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரும், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

700 கிராம் எடையுடைய 4,760,000 பெறுமதியான தங்கம் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

போலி பெல்ட்களிலும் பாதணியின் கீழும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்ககட்டிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.