துப்பாக்கி மற்றும் 5 ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது !

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள துப்பாக்கி மற்றும் 5 ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் மொரட்டுவை அங்குலான பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது சந்தேக நபர் இன்றைய தினம் பாணந்துதுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.