கிளிநொச்சியில் வீசப்பட்டுள்ள கோரிக்கை கடிதங்கள்!

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வரவை தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மக்களின் கோரிக்கை கடிதங்கள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மாவட்ட செயலகத்தின் முன்பாக இவ்வாறு பல கடிதங்கள், வேலை வாய்ப்புக்காக வழங்கப்பட்ட சுய விபர கோவைகள் உள்ளடங்களாக பல கடிதங்கள் பரவி காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலில் பிரதமர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.