ஜனாதிபதியாக வருவதற்கு எண்ணவில்லை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

 ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஸ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.  தெஹிவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 தான் ஜனாதிபதியாக வருவதற்கு எண்ணவில்லை.  மகிந்த ராஜபக்ஸ அதனை உரிய நேரத்தில் தீர்மானிப்பார்.

 ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னர் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
             



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.