சங்குப்பிட்டிப் பாலமும் விபத்து அவதானங்களும்!

சங்குப்பிட்டிப் பாலப் பகுதி ஆழமான கடல் என்பதால், இப்பகுதிக்கு வருகை
தருபவர்கள் கடலில் குளிப்பது, புகைப்படம் எடுப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலா மையமாக சங்குப்பிட்டிப் பாலப்பகுதி வளர்ந்து வரும் நிலையில், ஏ-32 வழியான போக்குவரத்தும் நடைபெறுகின்றபோது, விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

எனவே, புகைப்படம் எடுப்பவர்கள் வீதி ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் வாகனங்கள் வரும்போது வீதியைக் கவனிக்காமல், வீதியைக் கடக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் சிறுவர்களின் நடமாட்டம் தொடர்பாக பெரியவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புகைப்படம் பிடிப்போரினால் கூடுதலான விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதன் காரணமாக, இப்பகுதியில் நடமாடும் வீதிப்போக்குவரத்து பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறும், பொதுஅமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.