கட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு!
விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வவுனியா, தம்பனையில் நேற்று நடந்துள்ளது. தம்பனையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது-–38) என்பவரே உயிரிழந்தார்.
ரவிச்சந்திரனும், அவரது நண்பரும் நேற்றுக்காலை வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கட்டுத்துப்பாக்கி திடீரென வெடித் துள்ளது. இந்தத் தகவல் ரவிச்சந்திரனின் நண்பரால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஊர் மக்கள் உடலை மீட்டு வவுனியா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ரவிச்சந்திரனும், அவரது நண்பரும் நேற்றுக்காலை வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கட்டுத்துப்பாக்கி திடீரென வெடித் துள்ளது. இந்தத் தகவல் ரவிச்சந்திரனின் நண்பரால் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஊர் மக்கள் உடலை மீட்டு வவுனியா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை