பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் கொலை!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர்
மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த துயர சம்பவம் தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா சென்ற குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், உத்தம வில்லன் என கூறப்படும் இந்த இளைஞர் மிகவும் பணிவானவர் மற்றும் அன்பானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.