போதை பொருளுடன் பெண் கைது!


ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு இன்று  மாளிகாவத்தை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது. 
பொரலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்சர உயன பிரதேசத்தில் வைத்து நேற்றுமுன்தினம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
பொரலை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய  பெண்ணொருவரே இச்சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்யும் வேளையில் அவரிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை இன்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொண்டுவருகின்றனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.