வன்­னி­வி­ளாங்­கு­ளம் பகு­தி­யில் விபத்து ! ஒருவர் பலி!

முல்­லைத்­தீவு மாவட்­டம் வன்­னி­வி­ளாங்­கு­ளம் பகு­தி­யில் பய­ணித்த                     உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து மத­கு­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.

 சம்­பவ இடத்­தி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தோடு மற்­றொ­ரு­வர் படு­கா­யங்­க­ளு­டன், மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு, மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார் என்று இவ்­வாறு பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

 மல்­லாவி அனிஞ்­ச­யன் குளம் பகு­தி­யைச் சேர்ந்த முரு­கன் நளி­னன் (வயது -24) என்ற இளை­ஞனே உயி­ரி­ழந்­துள்­ளார். அவ­ரு­டன் பய­ணித்த சிவ­லிங்­கம் ஜென­கன் (வயது -20) என்ற இளை­ஞனே தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

மாங்­கு­ளத்­தி­லி­ருந்து மல்­லாவி நோக்­கிச் செல்­லும் பாதை­யில் உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த போது, வீதி­யோ­ரத்­தில் காணப்­பட்ட மத­கு­டன் மோதி விபத்து இடம்­பெற்­ற­தாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்­ததே இதற்­குக் கார­ணம் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.