திருக்கோவில் கல்வி வலயத்தில் ஆசிரியருக்கு சேவைநலன் பாராட்டு!

திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள இராம கிருஸ்ண கல்லூரி தேசிய பாடசாலையில் சித்திர பாடம் கற்பித்து ஆசிரியர் சேவையில் 39 வருட சேவையைப் பூர்த்தி செய்த திருமதி பிரமகுமார் யோகேஸ்வரியின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.
கல்லூரி அதிபர் கே.சோம்பால தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குறித்த ஆசிரியர் பொன்னாடை போர்த்தி, ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.