பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

பால் மா விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்குவது குறித்தும் இன்றும் தீர்மானிக்கவில்லை, தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

 அந்த அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

 உலக சந்தையில் நிலவும் விலையின் அடிப்படையில், இறக்குமதியாளர்களை சிக்களுக்க உள்ளாகாது தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 3 ஆயிரத்து 250 முதல் 3 ஆயிரத்து 350 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

 அதன்விலை, எதிர்வரும் காலத்தில் 3 ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரத்து 500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.