குப்பிளானுக்கு சென்ற பேருந்தை மறித்துத் தாக்கிய இளைஞர்கள்!
ஏழாலை ஊடாக குப்பிளானுக்குப் பயணித்த தனியார் பயணிகள்
பேருந்தை சில இளைஞர்கள் வழி்மறித்து தாக்கினர். பேருந்தில் பயணித்த பயணிகள் பதற்றத்துடன் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழாலை ஊடாக குப்பிளானில் பயணிக்கும் பேருந்தின் நடந்துநர் ஒருவருடன் அந்தப் பகுதி இளைஞர் ஒருவர். முரண்பட்டுள்ளார்.
முரண்பட்டவர்கள் மாலை 6.30 மணியளவில் பேருந்தை வழி மறித்து நடத்துநரை தேடியுள்ளனர். அந்த நடத்துநர் இல்லாததால் பேரூந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இளைஞர்கள் பயணிகள் பேருந்தை அடித்து நொருக்கும் போது பேருந்துக்குள் பயணிகள் இருந்துள்ளனர். கண்ணாடிகளை நெருக்கியபோது பயணிகள் பலருக்கு கண்ணாடிச் சிதறல்கள் தாக்கியுள்ளன. அச்சமடைந்த பயணிகள் பேருந்தை விட்டுக் குதிச்சுந் தப்பியோடினர்.
சாரதி பேருந்தை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக் குக் கொண்டு சென்றார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பேருந்தை சில இளைஞர்கள் வழி்மறித்து தாக்கினர். பேருந்தில் பயணித்த பயணிகள் பதற்றத்துடன் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
முரண்பட்டவர்கள் மாலை 6.30 மணியளவில் பேருந்தை வழி மறித்து நடத்துநரை தேடியுள்ளனர். அந்த நடத்துநர் இல்லாததால் பேரூந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இளைஞர்கள் பயணிகள் பேருந்தை அடித்து நொருக்கும் போது பேருந்துக்குள் பயணிகள் இருந்துள்ளனர். கண்ணாடிகளை நெருக்கியபோது பயணிகள் பலருக்கு கண்ணாடிச் சிதறல்கள் தாக்கியுள்ளன. அச்சமடைந்த பயணிகள் பேருந்தை விட்டுக் குதிச்சுந் தப்பியோடினர்.
சாரதி பேருந்தை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக் குக் கொண்டு சென்றார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை