யாழ் வாள் வெட்டு தூன்டிய காவல்துறையை எச்சரித்த நீதவான்!

யாழ்ப்பாண செய்திகள்:பொலிசார் தமது விசாரணைகளை
விரிவுபடுத்தாமல் திரும்ப திரும்ப ஒரே அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பித்து சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது என யாழ்ப்பாண பொலிசாரை இன்று கடும் தொனியில் எச்சரித்தார் யாழ் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையம் மீது கடந்த …… ஆம்திகதியன்று 10 மோட்டார் சைக்கிள்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை கொண்ட கும்பலொன்று விற்பனை நிலையம் மீதும் அதன் உரிமையாளர்கள் மீதும் தாக்குதலை நடாத்தியது. இக்கும்பலின் தலைவர் என கருதப்பட்டவரின் பிறந்த நாளை கொக்குவில் சந்திப்பகுதியில் கேக் வெட்டி கொண்டாட முயன்றமையே இத் தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக அமைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக எட்டுப் பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நால்வர் தொடர்ச்சியாக நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வருவதால் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக பெற்றுக் கொள்ளப்பட்ட கண்காணிப்பு கமராவின் காணொளிகள் அடங்கிய இறுவட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான அறிக்கை கிடைக்கும் வரை சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.

அதற்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த மேலதிக நீதிவான் விளக்கமறியலில் வைப்பது சந்தேகநபரொருவருக்கு தண்டனையாக அமையாது என கூறி இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஏனைய இருவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.