மரண ஓலத்திற்கான நீதியை தேடி கவனயீர்ப்பு!

எம் இனத்தின் மரண ஓலத்திற்கான நீதியை தேடி பயணிக்கும் கவனயீர்ப்பு கண்காட்சி
தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் " பேசப்படாத உண்மைகள் "கவனயீர்ப்பு கண்காட்சி 5 வது நாளாக இன்றைய தினம் காலை Düsseldorf நகர மத்தியிலும் மாலை நேரம் Frankfurt நகர மத்தியிலும் இடம்பெற்றது.கண்காட்சியை பார்வையிட்ட பல்லின மக்களுக்கு யேர்மன்- மற்றும் ஆங்கில மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. நாளைய தினம் கவனயீர்ப்பு கண்காட்சி காலை Mannheim நகரத்திலும் மாலை Landau நகரத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.