நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு!
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் புதிய அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளன. மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு தொடர்பிலான ஒத்திகையொன்று நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு நாடாளுமன்றின் புதிய அமர்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
கருத்துகள் இல்லை