பாலிவுட் செல்லும் வேதிகா!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய
மொழிப் படங்களில் நடித்துவந்த நடிகை வேதிகா, முதன்முறையாக பாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீப காலமாக படங்கள் இல்லாமல் இருந்த வேதிகா, காஞ்சனா 3 மற்றும் உபேந்திரா நடிக்கும் ஹோம் மினிஸ்டர் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுவந்த நிலையில், தற்போது பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது.
கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், அடுத்து ஒரு இந்திப் படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு கதாநாயகியாக வேதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களான இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் படம் ஒரு ஆங்கில த்ரில்லர் படத்தின் தழுவல்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், அதை ஒரே கட்டமாக 45 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஜீத்து ஜோசப். அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.