முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கல்முனை இளைஞர்கள் இரத்ததானம்!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கல்முனை சேனைக்குடியிருப்பு எவரெஸ்ட் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையுடன் இரத்ததான முகாம் சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

 கழகத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் இதில் இரத்த தானம் வழங்கினர். கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் இரத்த வங்கிப் பிரிவு இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.