வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நான்கு பாலங்கள் திறப்பு!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட மாறவிலுப்பை, நெடுங்கேணி, பெரியமடு, பழையவாடி ஆகிய நான்கு கிராமங்களின் பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட 04 பாலங்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.

இவ்வாறு திறக்கப்பட்ட பாலங்கள் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவில் ஒவ்வான்றும் தலா ; 28 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டவை.

இந் நிகழ்வில் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம், பிரதேச சபையின் உறுப்பினர்கள், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், பிரதேச சபையின் செயலாளர், என பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.