இலங்கை முழுவதும் பத்து இலட்சம் ஆஸ்மா நோயாளர்கள்!

நாட்டில் பத்து லட்சம் ஆஸ்மா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார். 

ஆஸ்துமா நோயினால் வருடந்தம் ஆயிரம் நோயாளர்கள் மரணிக்கிறார்கள். 

பாடசாலை செல்லும் 25 சதவீதமானோருக்கு ஆஸ்மாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன. 

ஆஸ்மா நோய்க்கான சிகிச்சையை அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் டொக்டார் கீர்த்தி குணசேகர குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.