விமானநிலையத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியைக் கொண்ட ஹெரோயினுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இன்று அதிகாலை ஒருவர் கைதாகியுள்ளார்.

 காவற்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார் .கைதானவர் மாலைத்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த நபர் ஏலவே பல தடவைகள் இலங்கைக்கு போதைப் பொருளை கடத்திவந்தவர் என்று, ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.